For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகரி சட்டசபை தேர்தல் - வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கதறி அழுத நடிகை ரோஜா

Google Oneindia Tamil News

நகரி: நகரியில் தன்னுடைய வெற்றி அறிவிப்பைக் கேட்டவுடன் நடிகை ரோஜா கதறி அழுததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

சீமாந்திராவில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றார்.இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் முத்து கிருஷ்ணம்ம நாயுடுவை விட 858 ஓட்டுகள் அதிகம் பெற்றார்.

Actress Roja won in Nagari and cry…

வித்தியாசம் குறைவாக இருந்தாலும் வெற்றி பெற்றதே பெரிய சாதனை என ரோஜா கருதினார்.வெற்றி சான்றிதழை பெற்றதும் அவர் உணர்ச்சி பெருக்கில் ‘ஓ' என்று கதறி அழுதார்.

கூடிநின்ற நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் நிதானம் அடைந்த நடிகை ரோஜா நிருபர்களிடம் பேசியபோது,

"30 ஆண்டு கால அரசியல் சாணக்கியர்களாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் இந்திரா பிரியதர்சினியின் தந்தை சென்னா ரெட்டி, தெலுங்கு தேச வேட்பாளர் முத்து கிருஷ்ணம்ம நாயுடு ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டேன் என்பதை விட யுத்தம் செய்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன்.

2 முறை நான் தெலுங்கு தேசம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட போது சொந்த கட்சிக்காரர்களால் நான் தோற்கடிக்கப்பட்டேன். இன்று அதே தெலுங்கு தேசத்துடன் காங்கிரஸ் கட்சியினரும் சேர்த்து என்னை தோற்கடிக்க சதி செய்தார்கள். அதையும் மீறி நான் வெற்றி பெற்றது சாதனையாக கருதுகிறேன்.

நான் நல்ல நடிகையாக இருந்துள்ளேன். சிறந்த குடும்ப தலைவியாக, கணவருக்கு நல்ல மனைவியாக குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து உள்ளேன். ஆனால் அரசியலில் மட்டும் எனக்கு தோல்வியே கிடைத்து வந்தது. இன்று அதிலும் சாதனை படைத்து விட்டேன்.

நகரி மக்களுக்காக என வாழ் நாளை அர்ப்பணிக்க உள்ளேன். அவர்களின் கோரிக்கை நிறைவேற போராடுவேன்" என்று கூறினார்.

English summary
Actress Roja cried when she got the document for her victory in Nagari constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X