For Daily Alerts
Just In
அமேதியில் கெஜ்ரிவாலை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்...
அமேதி: அமேதி தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்புஏற்பட்டது.
ராகுல் காந்தி போட்டியிடும் இத்தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விகாஸ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்தார் கெஜ்ரிவால்.
அயோத்திநகர் என்ற இடத்தில் சாலையோர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீரென பெண்கள் குழு அவரை முற்றுகையிட்டது. ராகுல் காந்தி வாழ்க, டெல்லியை விட்டு ஓடி வந்தவரே திரும்பிப் போ என்று முழக்கமிட்டனர்.
கருப்புக் கொடியும் காட்டப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அடி, கல் வீச்சு போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.
Comments
lok sabha election 2014 amethi aap kejriwal women protesters லோக்சபா தேர்தல் 2014 அமேதி ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் பெண்கள் போராட்டம் முற்றுகை
English summary
AAP convener Arvind Kejriwal and his supporters were on Sunday heckled by a group of women protesters during a roadshow in Ayodhyanagar.
Story first published: Monday, April 21, 2014, 8:29 [IST]