அஸ்ஸாமில் தீயில் கருகி இறந்தவர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல - போலீஸ்
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்தப் பெண் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று போலீஸ் கூறுகிறது. மாறாக, ராகுல் காந்திக்குக் கூட்டத்துக்குப் போய் விட்டு அவர் லேட்டாக வீடு திரும்பியதால் கணவருடன் சண்டை ஏற்பட்டதாகவும், அதில் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
அவரது கணவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிர் பிழைத்து ஏதாவது கூறினால்தான் உண்மை தெரிய வரும்.
அஸ்ஸாமின் ஜோர்ஹாட் நகருக்கு ராகுல் வந்திருந்தார். அங்கு மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில பெண்கள் திடீரென ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தனர்.
அதில் ஒருவர்தான் தற்போது தீயில் கருகி உயிரிழந்தவரான போன்டி சுத்தியா என்று முதலில் தகவல்கள் கூறின. காங்கிரஸ் வார்டு உறுப்பினராவார் இவர்.
நேற்று இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராகுல் காந்திக்கு தனது மனைவி முத்தமிட்டதால் கோபமடைந்து அவருடன் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தீவைத்துக் கொன்று விட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது அதை போலீஸார் மறுத்துள்ளனர். அந்தக் கூட்டத்திற்கு போன்டி போனது உண்மைதான். ஆனால் அவர் முத்தம் தரவில்லை. இதை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சிலரும் உறுதிப்படுத்தியுள்ளனர். உண்மையில் என்ன நடந்தது. இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.