பெண்களுக்கு எதிரான குற்றத்தை குறைக்க 'பார் கேர்ள்ஸ்'களுக்கு தடை விதிக்க பரிந்துரை
மும்பை: மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஹோட்டல்களில் பார் பெண்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தர்மாதிகாரி குழு மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க விதிமுறைகளை பரிந்துரை செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் தர்மாதிகாரி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழு அளித்துள்ள பரிந்துரைகளில் சில,
பார் பெண்கள்
ஹோட்டல்களில் பார் பெண்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தர்மாதிகாரி குழு பரிந்துரை செய்துள்ளது.
ஃபேஸ்புக்
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிடவை இளைஞர்களிடையே வன்முறை குணத்தை ஏற்படுத்துவதாக தர்மாதிகாரி குழு தெரிவித்துள்ளது.
தடை
ஆண்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பெண்களை இழிவுபடுத்துவதால் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
விவாகரத்து
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் உலக அளவில் விவகாரத்து பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தர்மாதிகாரி குழு தெரிவித்துள்ளது.