For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அது' வேண்டாம் என்றேன், தாலி கட்டினார்: சதானந்த கவுடா மகன் மீது நடிகை புகார்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: என்னை திருமணம் செய்துவிட்டு வேறு பெண்ணுடன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகனுக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கலாம் என்று கன்னட நடிகை மைத்ரியா கவுடா கேள்வி எழுப்பியுள்ளார். கார்த்திக் தன்னுடன் நெருக்கமாக இருக்க விரும்பியதாகவும் திருமணத்திற்கு முன்பு எதுவும் வேண்டாம் என்று தான் உறுதியாக கூறிய பிறகு அவர் தாலி கட்டியதாகவும் மைத்ரியா தெரிவித்துள்ளார்.

மாடலாக இருந்து நடிகையானவர் மைத்ரியா கவுடா. அவர் சூர்யா தி கிரேட், ஹ்ருதயா ஐ மிஸ் யூ, புனீத் ராஜ்குமார் நடித்த மவ்ரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் தனது கணவர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மைத்ரியா அளித்த புகாரின்பேரில் பெங்களூர் போலீசார் கார்த்திக் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திக்கிற்கு நேற்று தான் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இது குறித்து மைத்ரியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காதல்

காதல்

எனக்கு கார்த்திக் கவுடாவை கடந்த மே மாதம் முதல் தெரியும். முதலில் நண்பர்களாக பழக ஆரம்பித்தோம். பின்னர் நட்பு காதலாக மாறியது.

கவுடாக்கள்

கவுடாக்கள்

நானும், கார்த்திக்கும் பழகியது, காதலித்தது அவரின் குடும்பத்தாருக்கு நன்கு தெரியும். நான் கார்த்திக்கின் அம்மாவுடன் எல்லாம் பேசி இருக்கிறேன்.

தாலி

தாலி

கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி மங்களூரில் வைத்து கார்த்திக் எனக்கு ரகசியமாக தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

பேச்சு நிறுத்தம்

பேச்சு நிறுத்தம்

திருமணம் முடிந்த பிறகு கடந்த ஜூலை மாதம் 25ம் தேதியில் இருந்து கார்த்திக் என்னுடன் பேசுவதை நிறத்திவிட்டார்.

நெருக்கம்

நெருக்கம்

கார்த்திக் என்னுடன் நெருக்கமாக இருக்க விரும்பினார். திருமணத்திற்கு முன்பு எதுவும் வேண்டாம் என்று நான் உறுதியாக கூறிய பிறகு அவர் எனக்கு தாலி கட்டினார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

கார்த்திக்கும், நானும் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ என்னிடம் உள்ளன என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். கார்த்திக் அவரை ஒரு நாள் ஏமாற்றிவிடுவார் என்று மைத்ரியாவை அவரது தாய் எச்சரித்துள்ளார்.

நிச்சயம்

நிச்சயம்

என்னை திருமணம் செய்துவிட்டு கார்த்திக்கிற்கு எப்படி வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடக்கலாம் என்று மைத்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்த்திக்

கார்த்திக்

நான் மைதிர்யாவை திருமணம் செய்யவில்லை. இது பொய்யான புகார். அவர் காண்பித்த புகைப்படங்கள் போலியானவை என்று கார்த்திக் தெரிவித்துள்ளார்.

English summary
Kannada actress Mythriya told that central railway minister Sadananda Gowda's son married her after she refused to have intimate relationship before tying the knot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X