For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் பள்ளி வளாகத்தில் மாணவி பலாத்காரம்: பள்ளி தலைவர் அதிரடி கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

Bangalore school girl rape case: Police arrest school's chairman
பெங்களூர்: பள்ளி வளாகத்தில் ஆறுவயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பள்ளியின் நிறுவன தலைவர் ருஸ்டம் கேரவாலா கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் விஷயத்தை மூடி மறைக்க முற்பட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் மாரத்தஹள்ளியிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் 6 வயதான 1ம் வகுப்பு மாணவி, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் முஸ்தபா என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரது லேப்டாப்பில் சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதற்கு முன்பு இதே ஆசிரியர், ஒயிட்பீல்டிலுள்ள மற்றொரு பள்ளியிலும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. தகுந்த விசாரணையின்றி ஆசிரியர்களை நியமித்த பள்ளிக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இம்மாதம் 17ம்தேதி முதலே பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் தீவிரமாகியுள்ளது. டெல்லியில் நிர்பயா பலாத்கார சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பை போல பெங்களூரிலும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு எம்.என்.ரெட்டி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் கமிஷனரானதும் பள்ளியின் நிறுவன தலைவர் ருஸ்டம் கேரவாலாவை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை தொடங்கினார்.

{ventuno}

இந்நிலையில் கோவா அருகே டையு டாமன் பகுதியில் ருஸ்டம் கேரவாலா இருப்பதாக தகவல் அறிந்த பெங்களூர் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தில் மெத்தனமாக இருந்து சிறுமிக்கு எதிரான குற்றச்செயலுக்கு மறைமுக காரணமாக இருந்ததாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பலாத்காரங்களில் இருந்து சிறுமிகளை காப்பாற்றும் (posco) சட்டத்தின் 21வது பிரிவு, இந்திய தண்டனை சட்டத்தின் 201வது பிரிவு (போலீசாருக்கு சரியான தகவலை அளிக்காதது), மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டம் பிரிவு-23 ஆகியவற்றின்கீழ் பள்ளி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி தெரிவித்தார்.

English summary
Police arrested chairman of Vibgyor High School, Rustom Kerrawala, on Tuesday night, Police Commissioner MN Reddy informed on Wednesday, days after a case of alleged rape of a six-year-girl in the school came to light.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X