பட்ஜெட்: துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.11,635 கோடி: தூத்துக்குடியில் வெளிப்புறத் துறைமுகம்!
டெல்லி: துறைமுக மேம்பாட்டிற்கென ரூ 11,635 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் தூத்துக்குடியில் வெளிப்புற துறைமுகம் ஒன்று அமைக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி. அப்போது அவர், துறைமுகங்களை இணைக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ரூ 11,635 கோடி ஒதுக்கீடு...
இந்தாண்டு பட்ஜெட்டில் 16 துறைமுகங்களை மேம்படுத்துவதற்கென ரூ 11,635 கோடியை அருண்ஜெட்லி ஒதுக்கீடு செய்துள்ளார்.
வெளிப்புற துறைமுகம்...
இந்தியாவில் மொத்தம் 13 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான தூத்துக்குடியில் வெளிப்புற துறைமுகம் ஒன்று அமைக்கப் படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் மேம்பாடு...
மேலும், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
நதி வழி வர்த்தகம்...
கடல் வழி வர்த்தகத்தைப் போலவே உள்நாட்டு நதிகள் வாயிலாகவும் வர்த்தகம் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.