ஏர்ஹோஸ்டஸிடம் சில்மிஷம்.. கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி நடிகர்கள் விமானத்தை விட்டு இறக்கம்
கொச்சி: சிசிஎல் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியைச் சேர்ந்த சில நடிகர்கள் கொச்சி விமான நிலையத்தில் விமான ஊழியர்களுடன் தவறாக நடந்ததால் அனைவரையும் விமானத்தை விட்டு இறக்கி விட்டனர்.
30 பேர் கொண்ட கேரளா நடிகர்கள் அணியினர், ஹைதராபாத்தில் நடைபெறும் சிசிஎல் போட்டிக்காக விமானத்தில் பயணிக்க வந்தனர். கொச்சி விமான நிலையத்தில் அவர்கள் விமானத்தில் ஏறினர். அப்போது சில வீரர்கள் விமானப் பணிப்பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து விமானம் நிறுத்தப்பட்டது. மேலும், அனைத்து வீரர்களையும் விமான நிறுவனத்தினர் தரையிறக்கி விட்டு விட்டுப் போய் விட்டனர்.
நாளைக்கு ஹைதராபாத்தில் கேரள அணியினர் ஆட வேண்டும். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்து அவமானத்துக்குள்ளானதால் எப்படி நாளைக்கு ஹைதராபாத் போவது என்று தெரியாமல் வீரர்கள் தவித்துப் போய் விட்டனர்.
விளையாடப் போகும் நேரத்தில் இந்த சேட்டையெல்லாம் தேவையா சேட்டன்ஸ்..