5 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைகிறது டீசல் விலை! பெட்ரோல் விலையும் குறைகிறது!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.75 அளவுக்கு விரைவில் குறையாலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலை இந்தஅளவுக்கு குறைக்கப்பட உள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலைகுறைப்பை விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் விலைஉயர்வு ஏற்படாத நிலையில் விரைவில் இந்த விலைகுறைப்பை அறிவிக்க சாத்தியம் உள்ளது. விலைகுறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் விலை குறைப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திற்குகடிதம் எழுதியுள்ளது.
5 ஆண்டுகளுக்குப் பின்னர் டீசல் விலை குறைக்கப்பட உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி டீசல் விலை ரூ. 2 குறைக்கப்பட்டு ரூ. 30.86 ஆக இருந்தது. பின்னர் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து டீசல் விலை மாதத்துக்கு 50 பைசா உயர்த்தப்பட்டு வந்தது.