ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லியிலும் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி!
டெல்லி: ஜப்பானில் 7.9 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவுக்கு பதிவான நில நடுக்கத்தால் அந்த நாடே சின்னாபின்னமாகி போனது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த அச்சம் நீங்கும் முன்பாக, ஜப்பானில் இன்று 7.9 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்யோவில் பல கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரை எதிரொலித்தது. டெல்லி மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்ததால், வீதிகளுக்கு ஓடிச் சென்றனர்.
கிழக்காசிய நாடுகள் சுனாமி பீதியடைந்தாலும், சுனாமி எச்சரிக்கைவிடப்படாததால் மக்கள் நிம்மதியடைந்தனர். இந்த நிலநடுக்கம், ஜப்பானின் போனின் தீவை மையமாக கொண்டு தாக்கியுள்ளது.