For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாச படம் எடுத்து மிரட்டி பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பலாத்காரம்: பேஸ்புக் நண்பன் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் 23 வயது பெண் சாப்ட்வேர் இன்ஜினியர், பேஸ்புக் நண்பனால் ஆபாசமாக போட்டோ எடுத்து , மிரட்டி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இது பற்றி அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பெண், போலீசிடம் கூறியுள்ளதாவது: நான் கல்லூரியில் படிக்கும்போது 25 வயதான குஜாரத்தைச் சேர்ந்த ரிஷப் கட்டோடியா என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகம் கிடைத்தது . இவர் இன்ஜினியரிங் படித்து வரும் கல்லூரி மாணவனாகும். ஒருமுறை தன்னுடன் இயற்கையை ரசிக்க வருமாறு என்னை அழைத்தார் .

அவரை நம்பி நானும் சென்றபோது எனக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கத்தில் ஆபாச படங்கள் எடுத்தார் . பின்னர் இந்த படங்களை என்னிடம் காண்பித்து என்னை அவரின் ஆசைக்கு இணங்கும்படியும் , இல்லையென்றால் படங்களை இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டினார் .

என்னை வதோதராவுக்கு அழைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தார் . சில நாட்கள் கழித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார் . நான் இதை மறுத்த போது என்னை மீண்டும் பழையபடியே படங்களை இணையத்தில் போட்டுவிடுவதாக கூறி மிரட்டினார் . இதன்பிறகு போலீசாரிடம் புகார் அளிக்க முடிவு செய்தேன் . இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ளன ரிஷப் கட்டோடியாவை போலீசார் கைது செய்தனர்.

English summary
An engineering student has been arrested for allegedly raping and blackmailing a 23-year-old woman software engineer by making an obscene video clip of her, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X