'லோக்கல்' ஆக முடிவெடுத்த ஹேமா.. மதுராவில் வீடு வாங்குகிறார்!
மதுரா: உ.பி. மாநிலம் மதுராவில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமமாலினி, மதுராவில் ஒரு வீடு வாங்குகிறார்.
அவருக்கு சொந்த ஊர் மதுரா இல்லை என்பதை எதிர்க்கட்சியினர் பிரசாரமாக வைத்து விட்டதால் பேசாமல் வீடு வாங்கி விட முடிவு செய்துள்ளாராம் ஹேமமாலினி.
தேர்தல் முடிந்ததும் ஹேமா மும்பைக்கு ஓடி விடுவார். அவருக்குப் போயா ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று காங்கிரஸார் பிரசாரம் செய்து வருவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளார் ஹேமா.
இது கிருஷ்ண ஜென்ம பூமி
காங்கிரஸாரின் இந்தப் பிரசாரம் குறித்து ஹேமா கூறுகையில், கிருஷ்ணர் பிறந்த ஜென்மபூமி எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.
வீடு வாங்க்ப போகிறேன்
எனவே மதுராவில் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளேன்.
நானும் இனிமேல் லோக்கல்தான்
எனவே நானும் உள்ளூர்காரர்தான். என்னை யாரும் இனிமேல் அன்னியர் என்று கூற முடியாது என்றார் ஹேமா.
அஜீத் சிங் மகனை எதிர்த்து
மதுராவில் ஹேமாவை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தளம் சார்பில் அதன் தலைவர் அஜீத் சிங்கின் மகன் ஜெயா செளத்ரி நிற்கிறார்.