போஸ்டர், லோகோ தயாரித்து மத்திய அரசிடமிருந்து ரூ. 50,000 பரிசு வாங்குங்க!
டெல்லி: மத்திய அரசு ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதில் வென்றால் ரூ. 50,000 பரிசு கிடைக்கும்.
மத்திய நிதி அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் மக்களுக்கான நிதி சார்ந்த சலுகைகளுக்கான போஸ்டர்கள், லோகோ ஆகியவற்றிற்கான வடிவமைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் வடிவமைப்புக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வடிவமைப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 7 ஆகும். இதில் பங்கேற்க விருப்பமுடையவர்கள் http://mygov.nic.in/index என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
"தேர்வானது கமிட்டியின் முடிவைப் பொறுத்து அமையும்" என்று மேலும் அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மைகவ் இணையதளமானது அரசு உருவாக்கியுள்ள புதிய தளமாகும். இதை பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.