For Daily Alerts
Just In
லேட்டாய் டீ போட்ட மனைவி- போட்டுத்தள்ளிய கணவன்: ஒடிசா கொடுமை!
புவனேஸ்வர்: ஒடிசாவில் மனைவி டீ போட்டுக் கொண்டுவர தாமதமானதால அவரைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் உள்ள குஹாலிபாலைச் சேர்ந்தவர் மஹாலியா நாயக். 56 வயதான இவர், கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவி ஜனாவிடம் டீ கொண்டுவரும்படி கேட்டுள்ளார்.
டீ கொண்டுவருவதில் தாமதமானதால், மஹாலியாவுக்கும் ஜனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து உணவு சமைக்க போவதில்லை என்று ஜனா கூறியதால் இருவருக்கும் சண்டை வலுத்தது.
இது குறித்து கணவன்- மனைவி இருவருக்கும் அன்று இரவு மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் மஹாலியா, தனது மனைவியை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியதில் ஜனா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை அன்று தகவல் தெரிவிக்கப்பட்டதும், மஹாலியா நாயக் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments
English summary
A 56 year old man killed his wife for making delay in serving tea. He was arrested.