குருநாத் மெய்யப்பனுக்காக நான் எதுவும் செய்யப்போவது இல்லை: சீனிவாசன்
சென்னை: ஐபிஎல் பெட்டிங் வழக்கில் சிக்கிய மருமகன் குருநாத் மெய்யப்பனுக்காக தாம் எதுவும் செய்யப் போவது இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், குருநாத் மெய்யப்பன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் நீங்கள் அவரிடம் தான் இதுகுறித்து பேசவேண்டும். அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சட்டம் தன் கடமையை செய்யும்.
விளையாட்டுக்கு தொடர்பு இல்லை
அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கும் விளையாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவரோட வேலை
அவரது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவரது பொறுப்பு. அவருக்காக நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
மீண்டும் தேர்தலில் போட்டி
29-ம் தேதி சென்னை பொதுக்கூட்டத்தின் போது நடக்கும் பிசிசிஐ. தலைவர் தேர்தலில் மீண்டும் நான் மீண்டும் போட்டியிடுவேன்.
பிசிசிஐ தலைவராகவே..
நீங்கள் என்ன நினைத்தாலும் அக்கூட்டத்தில் பி.சி.சி.ஐ.-யின் தலைவராகவே நான் கலந்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.