For Daily Alerts
Just In
மும்பையில் டபுள் டக்கர் பாலம் திறப்பு
மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டக்கர் மேம்பாலம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சாந்தாகுரூஸ் மற்றும் செம்பூர் லிங்க் ரோடு இடையே டபுள் டக்கர் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் நீடித்த கடும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறி வந்த வாகன ஓட்டிகள் டபுள் டக்கர் பாலத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்களது பயண நேரம் குறைவதாகவும், எரிபொருள் சேமிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர். இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட டபுள் டக்கர் மேம்பாலம் என்ற பெருமையை இதுபெற்றுள்ளது.
இருப்பினும் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்லக்கூடாது, மணிக்கு அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை போக்குவரத்து காவல்துறை விதித்துள்ளது.
Comments
English summary
India's first double-decker flyover opens in Mumbai between santa cruz and sempur link road to ease traffic congestion.