பாலிவுட் நடிகர், நடிகைகளை தாக்க திட்டமிட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள்
டெல்லி: பாலிவுட் நடிகர், நடிகைகள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் கடந்த ஆண்டு கைதான பிறகு அந்த அமைப்பை தலைமை தாங்கி நடந்தி வந்தவர் தெஹ்சீன் அக்தர் என்ற மோனு. தெஹ்சீன் அக்தர் கடந்த மாதம் 24ம் தேதி இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் விசாரணையில் அக்தர் கூறுகையில்,
வாலிபர்கள்
பாலிவுட் நடிகர், நடிகைகள் நிர்வாணம், ஆபாசம் உள்ளிட்டவற்றை படங்கள் மூலம் காண்பித்து வாலிபர்களை கெடுத்து வருகிறார்கள். இதனால் அவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த யாசின் பட்கல் திட்டமிட்டார்.
பாலிவுட்
பாலிவுட் நட்சத்திரங்கள் கூடும் கூட்டத்தில் தாக்குதல் நடத்த யாசின் திட்டமிட்டார். அப்போது தான் அதிகமான நடிகர், நடிகைகள் இறப்பதோடு பாலிவுட்டுக்கும் அது பெரிய அடியாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.
ஆயுதங்கள்
தற்கொலைப்படை தாக்குதல் நடத்த போதிய ஆட்களும், ஆயுதங்களும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிடம் இல்லை என்பதை யாசின் அறிந்திருந்தார்.
தேதி
யாசின் பாலிவுட் நட்டத்திரங்களை தாக்குவது குறித்து கடந்த 2011ம் ஆண்டு தெரிவித்தார். அப்போது தான் டெல்லி மற்றும் பீகாரில் இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்களை போலீசார் தேடித் தேடி கைது செய்தனர் என்றார்.