ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி சாத்தியமா?: யோசனை கேட்கிறது பிரதமர் அலுவலகம்
டெல்லி: ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்வது சாத்தியமா என்று ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் யோசனை கேட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர், பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்தே இப்படி ரயில் பாதைகளில் காற்றாலைகளை நிறுவி ஓடும் ரயில்கள் மூலமான காற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமா என்று ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் யோசனை கேட்டுள்ளது.
ஆனால் இப்படியான காற்றாலைகள் மூலம் மிகக் குறைந்த அளவுதான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். அதாவது ஒரு நாளைக்கு மொத்தமே 25 நிமிடங்கள்தான் காற்றாலைகள் இயங்க முடியும். இதனால் இது கூடுதல் செலவு ஏற்படுத்தும் திட்டம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.