For Daily Alerts
Just In
ஜெயலலிதா ஜாமீன் மனு: நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா விசாரிக்கிறார்!
1954ம் ஆண்டு பிறந்த ஏ.வி.சந்திரசேகரா, 1984ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வக்கீலாக பணியாற்றத் தொடங்கினார். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். 1996ம் ஆண்டு மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக உயர்வு பெற்றார். கூடுல் செஷன்ஸ் மற்றும் மாவட்ட நீதிபதியாக இருந்துள்ளார்.
பெங்களூர், மங்களூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக கோலார், உடுப்பி, பெங்களூர் ஊரகம், மண்டியா மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
கர்நாடக நீதித்துறை அகாடமியின் இயக்குநராகவும், பெங்களூர் தியான மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி முதல் கர்நாடக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
Comments
English summary
Karnataka HC Justice A V Chandrasekara will hear Jayalalitha's bail plea on Oct 7.