For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல்! வாரணாசியில் சரமாரி கல்லடி!!

By Mathi
|

வாரணாசி: ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாரணாசியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் எங்கு போனாலும் அவர் அடிவாங்காமல் வருவதில்லை.. கருப்பு மை தெளிப்பது, முட்டை வீசுவது, கன்னத்தில் அடிப்பது, வயிற்றில் குத்துவிடுவது என எல்லா ரக அடிகளையும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

Kejriwal attacked again, now stones hurled at AAP leader in Varanasi

தற்போது வாரணாசியில் முகாமிட்டிருக்கும் கேஜ்ரிவால் நேற்று பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் அருகே பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர்கள் கூட்டம் திடீரென கேஜ்ரிவால் மீது சரமாரியாக கற்களை வீசத் தொடங்கியது. இதில் கேஜ்ரிவால் காயமடைந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த இளைஞர்களை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.

English summary
Aam Aadmi Party (AAP) leader Arvind Kejriwal has been attacked again and this time stones were hurled at him during his campaigning in Varanasi on Thursday, April 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X