For Quick Alerts
For Daily Alerts
Just In
உத்தரப்பிரதேச பட்டாசு ஆலை தீ விபத்து: 6 பேர் பலி
லக்னோ: உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.
லக்னோவின் மோகன்லால்கஞ்ச் என்ற இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இன்று காலை அந்த பட்டாசு ஆலையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே கருகினர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
Comments
English summary
A major blast in a cracker factory in Lucknow killed six people and injured 14 others on Saturday morning.
Story first published: Saturday, September 20, 2014, 11:27 [IST]