For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் +2 மாணவியை காரில் கடத்தி, ஒரு வாரமாக பலாத்காரம் செய்த 6 பேருக்கு வலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லக்னௌ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி மாணவியை காரில் கடத்தி சென்று, ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சண்டவுலி என்ற மாவட்டத்தில் ப்ளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 9 ஆம் தேதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென மாணவியின்அருகே நின்றது. இதில் இருந்த சிலர் காருக்குள் மாணவியை இழுத்துப்போட்டு கொண்டு வேகமாக தப்பினர்.

அலகாபாத் நகரில் ஒரு ஆள் அரவமற்ற பகுதயில் உள்ள ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்த 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒருவரமாக மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளது.

இந்நிலையில் மயங்கி கிடந்த மாணவியை அதே காரில் கொண்டு சென்ற அந்த மர்ம கும்பல், வாரணாசி நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு கீழே தள்ளிவிட்டது.

ந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகள் கண்ட் ரெயில் நிலையத்தின் அருகே மயங்கி விழுந்துக் கிடப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர். அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

மயங்கி கிடந்த மகளின் நிலையை கண்டு கதறிய பெற்றோர். பெண்ணை மயக்கம் தெளியவைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்கார செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் 6 பேரையும் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

English summary
A 17-year-old girl was allegedly kidnapped and gang raped by six persons here, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X