"ஹலோ, நான் மோடி பேசுறேன்.. அந்த ஃபைல் என்னாச்சு?"
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது செல்போன் எண்ணை உயர் அதிகாரிகள், சில மாநில ஆளுநர்களுக்கு அளித்ததுடன் மத்திய அமைச்சர்களின் செல்போன் எண்களையும் வாங்கி வைத்துள்ளாராம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வேலைகள் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும். அதனால் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லாம் கொடுக்கும் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கிறார்கள்.
இந்நிலையில் மோடி தனது செல்போன் எண்ணை முக்கிய அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தொடர்புள்ளவர்கள் மர்றும் சில மாநில ஆளுநர்களுக்கு அளித்துள்ளார். எண்ணை கொடுத்திருப்பது சும்மா இல்லை வேலைகள் துரிதமாக நடக்கிறதா என்பதை அவ்வப்போது தெரிந்துகொள்ளத் தான்.
மேலும் அவர் மத்திய அமைச்சர்களின் செல்போன் எண்களையும் வாங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் அமைச்சர்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு வேலை குறித்து பேசி வருகிறார்.
ஏற்கனவே மோடி போட்ட பல அதிரடி உத்தரவுகளால் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆடிப்போயுள்ள நிலையில் அவர் செல்போன் மூலம் வேலை வாங்குவது பலரையும் வியக்க வைத்துள்ளது.