மும்பையில் பயங்கரம்: கணவர், வளர்ப்பு மகன் மற்றும் கணவரின் நண்பர்களால் பெண் பலாத்காரம்
மும்பை டின்தோஷி பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கடந்த சில ஆண்டுகளில் தன்னை 12 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்புகாரில் அப்பெண் கூறிருப்பதாவது:-
நான் எனது முதல் கணவரை கடந்த 2004 ஆண்டு விவாரத்து செய்தேன். பின்னர் நான் முகமத் அஸ்லம் கான் என்பவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தோஷமாக வைத்து கொள்வதாக கூறி திருமணம் செய்து கொண்டார்.நாங்கள் இருவரும் திருமணம் செய்த பின் சாந்த குரூஸ் வந்தோம் பின்னர் உத்த்ரபிரதேசம் முராதாபாத் வந்தோம் அங்கு வந்த பிறகுதான் கானுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரம் தெரிய வந்தது.
அங்கு என்னை வீட்டில் அடைத்து வைத்து அஸ்லம் கான் துன்புறுத்தினார். அவரது மகன் அமீர் பல நேரங்களில் என்னை கட்டாயப் படுத்தி பலாத்காரம் செய்தார். இதனால் நான் அங்கிருந்து மும்பை திரும்பினேன், டின்தோஷியில் உள்ள எனது தாயார் வீட்டிலேயே வாழ தொடங்கினேன்.
ஒருநாள் நான் வீட்டில் தனியாக இருந்தேன் அப்போது அஸ்லம் கான் அவரது 2 நண்பர்களுடன் அங்கு வந்தார். 3 பேரும் சேர்ந்து என்னை கட்டாயபடுத்தி பலாத்காரம் செய்தனர். மீண்டும் மீண்டும் கொடுமைகளை கண்ட நான் ஒரு வக்கீலை நாடினேன்.
அவரது உதவி மூலம் எனது கணவர் மற்றும் அவரது 2 நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது புகார் கொடுத்து உள்ளேன்' என இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் டின்தோஷி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.