டுவிட்டரில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்திய மோடி
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு இந்தியாவின் அடுத்தப் பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடி, டுவிட்டர் வாயிலாக தனது நினைவஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் 6வது பிரதமராக 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் 1989ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வரை பதவியில் இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த போது, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப் பட்டார். அவரது 23வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப் பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி, ராஜீவுக்கான தனது நினைவஞ்சலியை டுவிட்டர் வாயிலாக செலுத்தியுள்ளார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>My homage to former PM Shri Rajiv Gandhi on his death anniversary.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/468956338006294528">May 21, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>அதில் அவர், ‘மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு என் அஞ்சலிகளை சமர்பிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.