For Quick Alerts
For Daily Alerts
Just In
ஏப்ரல் 24க்குப் பிறகு 'மோடி அலை' சுனாமியாக மாறும்... அமித் ஷா ஆருடம்
வாரணாசி: வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா கூறியதாவது :-
கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து துறைகளிலும் செயலிழந்துவிட்டது.
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. வாரணாசி தொகுதியில் மோடி வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின்னர் நாடெங்கும் வீசி வரும் மோடி அலை சுனாமியாக மாறும்' எனத் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து நேற்று அவர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
lok sabha election 2014 bjp modi nomination wave tsunami amit shah லோக்சபா தேர்தல் 2014 பாஜக மோடி வேட்புமனுத் தாக்கல் சுனாமி அமித்ஷா
English summary
With BJP's Prime Ministerial candidate Narendra Modi set to file his nomination papers from Varanasi on April 24, his key aide Amit Shah on Saturday said, "The Modi wave will turn into a Tsunami on April 24. Narendra Modi will file his nomination papers from Varanasi on April 24."
Story first published: Sunday, April 20, 2014, 9:50 [IST]