அசாமில் 9 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளி தலைமறைவு
பார்பேட்டா: அசாம் மாநிலத்தில் உள்ள பார்பேட்டாவில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான பக்கத்து வீட்டு இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.
பார்பேட்டா பகுதியைச் சேர்ந்தவன் கருணா தாஸ். இவன் தன் வீட்டின் அருகே வசித்து வந்த 9 வயது சிறுமியை, கேரம் போர்டு விளையாடலாம் என்று கூறி நைசாக தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த கொடூரத்தை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் வெளியே தெரிந்தால் தங்களுக்கு அவமானம் எனக் கருதி அவர்கள் வெளியே சொல்லவில்லை. ஆனால் அந்த சிறுமியின் உடல்நிலை மோசமாகவே கவுகாத்தியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த செய்தி கேட்டு கருணாதாஸ் தலைமறைவாகிவிட்டான். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகளிர் அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாதாசை தேடிவருகின்றனர்.