ஒடிஷா ஏடி சிட் பண்ட் மோசடி... 'சன்னிலியோன்', நடிகைகளுக்கு பல கோடி அள்ளிக் கொடுத்தது அம்பலம்!!
புவனேஸ்வர்: ஒடிஷாவை உலுக்கும் ஏடி சிட் பண்ட் மோசடி வழக்கில் அந்நிறுவன உரிமையாளர், பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மற்றும் பல நடிகைகளுக்காக பல கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 17 லட்சம் பேரிடம் ரூ6,600 கோடி வசூலித்து எவருக்கும் பைசா பணம் கூட கொடுக்காமல் ஏப்படம் விட்ட மோசடி வடகிழக்கு மாநிலங்களை பெரும் புயலாக தாக்கியது. இன்னமும் இந்த புயல் கரையைக் கடக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஒடிஷா மாநிலத்தில் ஏடி குழுமத்தின் சிட் பண்ட் மோசடி விஸ்வரூபமெடுத்தது. இதிலும் பல முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள், மும்பை பங்குச் சந்தை தரகர் சந்த்ரத்தன் பரீக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏடி குழும உரிமையாளர் மும்பையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகளுடன் பார்ட்டிகளில் கலந்து கொண்டு பல கோடி ரூபாய் செலவழித்தார் என்று கூறியிருக்கிறார்.
சன்னிலியோனுக்கு 2 மணி நேரத்துக்காக ரூ40 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாகவும் பரீக், சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.