For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 வயது சிறுமியை நிர்வாணமாக்கி செல்போனில் படம்பிடித்த பாதிரியார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பத்து வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கேரள தேவாலய பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புனித பவுல் தேவாலயத்தில் பாதிரியாக இருப்பவர் ராஜு கொக்கன் (44). இந்த தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மீது ராஜு கொக்கனுக்கு காம எண்ணம் இருந்து வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தேவாலயம் வந்த அச்சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்ற பாதிரியார், அச்சிறுமியின் ஆடைகளை அவிழ்த்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பாதிரியாரின் செய்கையால் அதிர்ச்சிடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளாள்.

இதையடுத்து பாதிரியார் மீது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர்.

புகாரின்பேரில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததுள்ளதால் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவாகியுள்ளார்.

புகார் பற்றிய தகவலறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார் திருச்சூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜியோகடவில் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் தேவாலய சட்டப்படி பாதிரியார் ராஜு கொக்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

English summary
Police have registered a rape case against a Catholic priest in Kerala based on a complaint that he undressed a minor girl and took mobile snaps of her private parts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X