விபச்சாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ்நாடு.. நாட்டிலேயே நம்பர் 1!
ஹைதராபாத்: நாட்டிலேயே விபச்சாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் முதல் மாநிலம் என்ற அவப் பெயரை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த வரிசையில், 2வது மாநிலமாக ஒருங்கிணைந்த ஆந்திரா திகழ்கிறது.
கடந்த ஆண்டு நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான விபச்சாரத் தடுப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் விபச்சார வழக்குகள் போடப்பட்ட 2வது மாநிலம் ஒருங்கிணைந்த ஆந்திராவாகும். நாட்டின் விபச்சார சம்பவங்களில் 23 சதவீத சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இதைத் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2541 வழக்குகள்
நாடு முழுவதும் 2013ம் ஆண்டு மொத்தம் 2541 விபச்சாரம் தொடர்பான வழக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் 549
இதில் தமிழகத்தில் மட்டும் 549 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
ஆந்திராவில் 489
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 489 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
ஹைதராபாத் - சைபராபாத்
தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஹைதராபாத், சைபராபாத் மற்றும் சீமாந்திராவைச் சேர்ந்த விஜயவாடா, விசாகப்ட்டனம் ஆகிய பகுதிகளி்ல்தான் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறதாம். இங்குதான் அதிக அளவிலான வழக்குகள் பதிவாகியுள்ளன.
துணை நடிகைகள்... மாடல் அழகிகள்
தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல துணை நடிகைகள், மாடல் அழகிகள் ஆகியோர்தான் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களாம்.
கொழுத்த பணக்காரர்களின் சொப்பன சுந்தரிகள்
கொழுத்த பணக்காரர்கள், வர்த்தகர்கள், பெரிய பெரிய வேலையில் இருப்பவர்கள்தான் துணை நடிகைகளையும், மாடல் அழகிகளையும் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கிறார்களாம்.
ஹோட்டல்கள் - ரிசார்ட்டுகள்
பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில்தான் விபச்சாரம் அதிக அளவில் உள்ளதாம்.
இன்டர்நெட் மூலமும்
ஆன்லைன் விபச்சாரமும் தற்போது பிரபலமாகியுள்ளது. ஆன்லைன் மூலம் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் இந்தத் தொழிலை பல கும்பல்கள் செய்து வருகின்றனவாம்.