திருமணத்தை இத்தனை நாள் மோடி மறைத்து ஏன்? ராகுல் கடும் தாக்கு!!
ஸ்ரீநகர்: தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் திருமணத்தை மறைத்துவிட்டு திடீரென நரேந்திர மனைவி இருக்கிறார் என்று மோடி கூறியுள்ளதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
நரேந்திர மோடி எத்தனை தேர்தல்களில் போட்டியிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் இப்போது அவர் தமக்கு மனைவி இருப்பதாக சொல்கிறார். இத்தனை ஆண்டுகளாக இந்த விவகாரத்தை மோடி மறைத்தது ஏன்?
தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான உத்தரவால்தான் இப்போது மோடி ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்கள்தான் பெண்களின் கண்ணியம், மேம்பாடு பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். இதற்கு பாஜக என்ன பதில் சொல்லப் போகிறது?
மோடியின் ஆட்சியில் தானே இளம் பெண் ஒருவர் வேவுபார்க்கப்பட்டார். இளம்பெண் பயங்கரவாதி என்று சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படித்தான் பெண்களுக்கு "பாதுகாப்பும்" "மரியாதையும்" கொடுக்கிறது பாஜக.
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் செல்போனில் படம் பார்க்கிறார். அவர்கள் என்ன படம் பார்த்தார்கள் என்பது செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.