பலாத்கார வழக்கு: முன்ஜாமீன் கோரும் அமைச்சர் சதானந்த கவுடா மகன்
பெங்களூர்: நடிகை மைத்ரியா கவுடா அளித்த புகாரின்பேரில் தன் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
கன்னட நடிகை மைத்ரியா கவுடா கடந்த 27ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் தன்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் பெங்களூர் ஆர்.டி. நகர் போலீசார் கார்த்திக் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர்.
முன்ஜாமீன்
மைத்ரியா கூறுவது எல்லாம் பொய் என்று தெரிவித்து வந்த கார்த்திக் பெங்களூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றம்
கார்த்திக்கின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் அளிப்பது குறித்து தங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்று ஆர்.டி. நகர் போலீசாரிடம் கேட்டுள்ளது.
டிவி
கார்த்திக் கவுடாவுக்கு எதிராக மைத்ரியாவும், ஊடகங்களும் புகார்கள் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
பெயரை கெடுக்க
தங்களின் குடும்ப பெயரை கெடுக்கவே மைத்ரியா இப்படி பொய் புகார் தெரிவித்துள்ளதாக சதானந்த கவுடாவும், அவரது மகனும் தெரிவித்துள்ளனர்.