ஜெ. மனுவை நீதிபதி விசாரிக்கவே இல்லை.. ராம்ஜேத்மலானி
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் உள்ளிட்ட மனுக்களை விசாரிக்கக் கூட இல்லை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி. உடனடியாக பிரதமர் மோடி உடனடியாக இதில் தலையிட்டு ஜெயலலிதாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டு விட்டது. இதனால் குறைந்தது அக்டோபர் 7ம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ரத்னகலா அதிரடியாக 2 நிமிடங்களில் ஒத்திவைத்து விட்டுப் போய் விட்டார். இதனால் அனைவரும் கடும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதுகுறித்து ஜெயலலிதாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறுகையில், வழக்கை விசாரிக்காமலேயே நீதிபதி ஒத்திவைத்துவிட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெயலலிதாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.