For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லிம்களுக்கு தடை விதிக்கும் தொகாடியாவை சிறையில் அடைக்க வேண்டும்: அகாலிதள், ஆம் ஆத்மி

By Mathi
|

அமிர்தசரஸ்/டெல்லி; ஹிந்துக்கள் வீட்டை விலை கொடுத்து முஸ்லிம்கள் வாங்குவதை தடை செய்து கொண்டிருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவை சிறையிலடைக்க வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் வலியுறுத்தியுள்ளது. இதேபோல் தொகாடியாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவ ஹிந்து ஒருவரது வீட்டை விலைக்கு வாங்கி குடியேறியுள்ளார். ஆனால் இதற்கு ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் தடை விதித்துள்ளன.

SAD condemns Pravin Togadia

மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியோ, அப்படி வாங்கப்பட்ட வீட்டை உடனே ஆக்கிரமித்து "பஜ்ரங்க் தள்"பெயர்ப்பலகையை தொங்க விடுமாறும் ,முஸ்லிம்கள் அந்த வீட்டை விட்டு 48 மணி நேரத்தில் காலி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாக வெளியான செய்திகளால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரவீன் டொகாடியாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாரதிய ஜனதாவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் மூத்த தலைவர் நரேஷ் குஜ்ராலோ, இப்படி பேசுகிற தொகாடியாக்களை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கோரிக்கை

இதேபோல் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகாடியாவின் பாவ்நகர் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தொகாடியா மீது குஜராத் முதல்வர் உடனே நடவடிகை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Anyone who speaks such language should be arrested and disenfranchised: Naresh Gujral, SAD on Pravin Togadia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X