ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் திடீர் தடை!!
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் இறுதி வாதம் செய்யாத அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பெங்களூரு நீதிமன்ற நீதிபதி இரண்டு முறை அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சசி உட்பட மூவரும் ஆஜர்
இந் நிலையில் இன்றைய விசாரணையின் போது சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.