For Daily Alerts
Just In
டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீஸ் விசாரணை
சக பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ததாக கடந்த சனிக்கிழமை கோவா குற்றப்பிரிவு போலீசாரால் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார் .அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தருண் தேஜ்பால் மகள் தியாவிடம் டோனா பவ்லா அருகே 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பால் குறித்து அவரது மகளுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதி படுத்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Goa police on Thursday questioned the daughter of arrested Tehelka founder-editor Tarun Tejpal in connection with the case relating to his alleged sexual assault of a woman colleague.