ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் தமிழகம், கேரளா, காஷ்மீரைச் சேர்ந்த 100 இளைஞர்கள்?
டெல்லி: சிரியா மற்றும் ஈராக்கில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 100 இந்திய இளைஞர்களும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரியா, ஈராக்கில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கம். இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிலர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியன் முஜாஹிதீன் எனப்படும் இயக்கத்தின் தலைமறைவு நிர்வாகிகள்தான் இந்திய இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திடம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மத்திய அரசு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.