பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறது இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு!
டெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 5 எம்.பிக்கள் அடங்கிய குழு நேற்று டெல்லி வந்தடைந்தது.
இக்குழுவினர் பிரதமர் நரேந்திர மோடி நாளை சந்தித்து பேச உள்ளனர். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இலங்கை தமிழர் பிரதிநிதிகளுடன் நடத்தப்படும் முதலாவது சந்திப்பு இது.
பிரதமருடனான சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.
முன்னதாக இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இக்குழு சந்தித்து பேசியது.
மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.