கடும் வறட்சி பாதிப்பில் 53 உபி மாவட்டங்கள் – மீட்பு நடவடிக்கையில் அரசு!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பருவ மழை பொய்த்துள்ளதால் 53 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
நிலைமையை சமாளிக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உத்தர பிரதேசத்தில் சமீபகாலமாக பருவமழை சரியாக பெய்யவில்லை.
மழை அளவு குறைவு:
சமீபத்தில் பெய்த மழை கூட பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்யவில்லை. ஓரிரு இடங்களில் தான் பெய்துள்ளது.
கடும் வறட்சி:
இதையடுத்து அங்கு மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் 53 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
தண்ணீருக்கு தவிப்பு:
இதில் 19 மாவட்டகளில் நிலைமை மோசமாக உள்ளது. குடி தண்ணீருக்காக இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பல கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது.
கிராமங்கள் பாதிப்பு:
விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வறட்சி நிலைமையை சமாளிப்பற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
அரசு நடவடிக்கை:
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும்படி மாநில தலைமைச் செயலர் அலோக் ரஞ்சனுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.