For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி விமான நிலையத்தில் 'கூடங்குளம்' சுப. உதயகுமார் தடுத்து வைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

நேபாளத் தலைநகர் காத்மண்டுவிவில் ஐ.நா. மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லி விமான நிலையம் சென்றார் கூடங்குளம் சுப. உதயகுமார்.

Udayakumar detained in Delhi Airport

ஆனால் அவரை குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணை நடத்தினர். அப்போது தம் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நெல்லை மாவட்ட எஸ்.பி.யிடம் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி சான்றிதழ் பெற்றிருப்பதையும் உதயகுமார் அதிகாரிகளிடம் எடுத்துக் காட்டினார்.

ஆனாலும் நெல்லை எஸ்.பி.யுடன் ஆலோசித்த பின்னர்தான் நேபாளம் செல்ல அனுமதிப்போம் என்று கூறி உதயகுமாரை தடுத்து வைத்துள்ளனர்.

English summary
Anti-nuke activist Kudankulam S.P. Udayakumar asked to wait in the immigration area Delhi Airport by the officials on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X