For Daily Alerts
Just In
ஆச்சரியம் ஆனால் உண்மை: சிறுத்தையை வெறுங்கையால் அடித்துக் கொன்ற உத்தரகண்ட் பெண்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் 56 வயது பெண் ஒருவர் வெறுங்கையால் சிறுத்தையை அடித்துக் கொன்றுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கர்வால் பகுதியைச் சேர்ந்தவர் கமலா(56). அவர் ஞாயிற்றுக்கிழமை தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த சிறுத்தை கமலா மீது பாய்ந்து அவரை தாக்கியது.
உதவி கேட்டு கமலா அலறினார். ஆனால் உடனே யாரும் வராததால் கமலா சிறுத்தையுடன் போராடினார். கமலாவின் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தபோது அவர் படுகாயம் அடைந்து கிடந்தார், சிறுத்தையோ இறந்து கிடந்தது.
இதையடுத்து கமலாவை கிராமத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். புலியை முறத்தால் அடித்தாள் தமிழச்சி என்று கூறுவார்கள். இந்த ஜார்க்கண்ட் பெண்ணோ சிறுத்தையை வெறுங்கையால் அடித்துக் கொன்றுள்ளார்.
Comments
English summary
A 56-year old woman in Uttarakhand killed a leopard with her bare hands.
Story first published: Tuesday, August 26, 2014, 10:09 [IST]