அடங்காத ஆசை: மைசூர் அருகே அளவுக்கு அதிகமாக 'வயாக்ரா' சாப்பிட்ட வாலிபர் மரணம்
மைசூர்: கர்நாடகாவில் பாலுணர்வை தூண்டும் வயாக்ரா மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட வாலிபர் மரணம் அடைந்தார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள தடசூரைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(24). சிவலிங்கைய்யா மற்றும் கவ்ரம்மாவின் மகனான சேத்தன் மைசூர் அருகே உள்ள திபத்தூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் ஒரு செக்ஸ் அடிமை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் தனது காதலியுடன் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
காதலியுடன் உல்லாசமாக இருக்க தனது நண்பர் பிரகாஷின் வாடகை அறையை பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு பாலுணர்வை தூண்டும் வயாக்ரா மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது.
செக்ஸுக்கு அடிமையான அவருக்கு காதலியுடன் எத்தனை முறை உல்லாசமாக இருந்தும் ஆசை அடங்கவில்லை. இந்நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக வயாக்ரா மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்படி இருக்கையிலேயே அவர் மரணம் அடைந்துள்ளார்.
அவர் அளவுக்கு அதிகமாக வயாக்ரா எடுத்துக் கொண்டது தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.