உ.பியில் 20 நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற பெண்ணை 12 பேர் பலாத்காரம் செய்த கொடூரம்
ஹபூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் குழந்தை பெற்று 20 நாட்களே ஆன ஒரு பெண்ணை 12 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடந்த பல மாதங்களாக பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ஹபூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஷாஹித் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 12 பேர் அந்த வீட்டில் இருந்த அனைவரையும் கட்டி வைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளையடித்தனர்.
அதன் பின்னர் ஷாஹித்தின் மனைவியை கொள்ளையர்கள் 12 பேரும் கடத்திக் கொண்டு போய் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். ஷாஹித்தின் மனைவி 20 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.