For Daily Alerts
Just In
ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்க விபத்து- இடிபாடுகளில் சிக்கி 27 பேர் பரிதாப பலி!
பம்பாரி: மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு உள்ளது. இங்கு அதிக தங்க சுரங்கங்கள் உள்ளன. இந்த நிலையில் அங்கு பம்பாரி அருகே மலைகள் சூழ்ந்த வனப்பகுதியில் தங்க சுரங்கம் உள்ளது.
கனடாவை சேர்ந்தவருக்கு சொந்தமான இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே இந்த தங்க சுரங்கம் நேற்று திடீரென இடிந்து புதைந்தது.
அதில், 27 பேர் மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு மீட்பு பணி தீவிரமாக நடந்தது. இருந்தும் 25 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் இருவரது சடலங்களை முயற்சி நடைபெற்று வருகிறது.
Comments
English summary
At least 27 miners have been killed after a gold mine in Central African Republic (CAR) collapsed on Thursday, local authorities told Xinhua Friday.
Story first published: Saturday, August 23, 2014, 16:35 [IST]