For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளத்தொடர்பை காட்டிக் கொடுத்த மகன்... மனைவியின் கன்னத்தை கடித்துத் துப்பிய கணவர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹராரே: தனது தாயார் வைத்திருந்த கள்ளத்தொடர்பை புகைப்பட ஆதாரத்துடன் மகனே தந்தையிடம் மாட்டி விட்டு விட்டான். இதைக் கண்டு கொந்தளித்துப் போன தந்தை, தன்னை ஒரு வருடமாக உறவு கொள்ள விடாமல் தடுத்து வந்த மனைவி இப்படி சைடில் ஒரு கள்ள உறவை வைத்திருந்தது குறித்து ஆத்திரமடைந்து மனைவியின் கன்னத்தைக் கடித்துத் துப்பிவிட்டார்.

ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர் டுமிசானி டெபேல். இவரது வீடு புமுலா புலவேயோ நகரில் உள்ளது. சமீபத்தில் இவரது மகனிடம் சில புகைப்படங்கள் கிடைத்தன. அதைப் பார்த்த மகன் அதிர்ச்சி அடைந்தான். காரணம், அதில் அவனது தாயார், ஒரு நபருடன் நிர்வாண கோலத்தில் காணப்பட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், தனது தந்தையிடம் புகைப்படங்களைக் காட்டினான். அதைப் பார்த்து டெபேல் அதிர்ச்சி அடைந்தார். தன்னிடம் ஒரு வருடமாக உறவு கொள்ள விடாமல் தவிர்த்து வந்த தனது மனைவியின் இந்த செயலால் அவர் கொதிப்படைந்தார், கொந்தளித்தார்.

மனைவியுடன் சண்டை பிடித்தார். சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் மனைவியின் கன்னத்தை வெறி வந்து பலமாக கடித்தார். அதில் கன்னத்தின் ஒரு பகுதி துண்டாகி வாயுடன் வந்து விட்டது.

இதையடுத்து படுகாயமடைந்த நிலையில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து டெபேலை கோர்ட்டில் நிறுத்தினர். கோர்ட்டில் டெபேல் மீது வேறு மாதிரியான புகாரைக் கூறினார் மனைவி.

தனது கணவரை விவாகரத்து செய்ய தான் முடிவெடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக வழக்குப் போட்டிருப்பதாகவும், இதனால்தான் தன்னை அவர் அடித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார் டெபேல்.

English summary
A boy was furious when he discovered that his mother was having an affair with another man.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X