ஹனிமூன்.. காசு கொடுத்து ஒரு தீவையே காலி செய்த ஏஞ்சலினா ஜூலி- பிராட் பிட்!
நியூயார்க்: தாங்கள் தேனிலவு கொண்டாட மால்டா தீவில் இருப்பவர்கள் வெளியேற பணம் கொடுத்துள்ளனர் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், அவரது மனைவி ஏஞ்சலினா ஜூலியும்.
நடிகை ஏஞ்சலினா ஜூலியை திருமணம் செய்யாமலேயே அவருடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தார் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட். அவர்களுக்கு பிறந்தது 3 குழந்தைகள், அவர்கள் தத்தெடுத்தது 3 குழந்தைகள்.
6 குழந்தைகளும் அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர்.
இந்தா அந்தா
குழந்தைகள் என்ன தான் நச்சரித்தாலும் அவர்கள் திருமண பேச்சை எடுப்பதாகவே இல்லை. அவர்களை தவிர மற்ற அனைவரும் பிட், ஜூலியின் திருமணம் பற்றி பேசினர்.
திருமணம்
பிராட் பிட், ஏஞ்சலினாவின் திருமணம் இந்நேரம் நடந்திருக்க வேண்டும். இல்லை என்றால் அது விரைவில் நடக்கும் என்று பிராட் பிட்டின் சைக்கிக் அதாவது நடப்பதை முன்கூட்டியே கூறுபவரான ரான் பார்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
ரகசிய திருமணம்
பிட்டும், ஜூலியும் கடந்த மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஹனிமூன்
பிட்டும், ஜூலியும் மால்டா தீவில் தேனிலவை கொண்டாட முடிவு செய்துள்ளனர். அவர்கள் தனிமையில் இருப்பதற்காக தீவில் உள்ளவர்கள் வெளியேற ரூ.1 கோடியே 20 லட்சத்து 26 ஆயிரத்து 188 கொடுத்துள்ளனர்.
சம்மதம்
பணத்தை பெற்றுக் கொண்டு தீவை விட்டு வெளியேற பலரும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.