ஈராக்: மசூதிக்குள் புகுந்து 70 சன்னி முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற ஷியா ஆயுததாரிகள்!
பாக்தாத்: ஈராக்கில் டியாலா மாகாணத்தில் மசூதி ஒன்றுக்குள் நுழைந்த ஷியா முஸ்லிம் ஆயுததாரிகள் கண்மூடித்தனமான சுட்டதில் 70 சன்னி முஸ்லிம்கள் உயிரிழந்தனர்.
ஈராக்கில் சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக சன்னி முஸ்லிம்களைக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் மொசூல் நகரை கைப்பற்றி, அதனை தலைமையிடமாகக் ஈராக்கின் இதர பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர்.
கடந்த 11-ந் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகிய டியாலா மாகாணத்தின் ஜலவ்லா பகுதியை அமெரிக்க விமானப் படையின் உதவியுடன் குர்திஷ் போராளிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில் டியாலா மாகானத்தின் ஹம்ரீன் என்ற இடத்தில் சன்னி பிரிவினரின் மசூதி ஒன்றுக்குள் புகுந்த ஷியா ஆயுததாரிகள் உள்ளே இருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கிகளால் கண்மூடித்தனமான சுட்டனர்.
இதில் 70 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.