For Daily Alerts
Just In
ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
டோக்கியோ: ஜப்பானில் இன்று 5.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் உண்டானது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 5.6 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின, இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 50கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருக்கும் அணு உலைகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கொண்டு நிலநடுக்க சேதாரம் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Comments
English summary
An earthquake with preliminary magnitude of 5.6 shook buildings in eastern Japan, including the capital Tokyo, on Tuesday but there were no reports of serious damage.
Story first published: Tuesday, September 16, 2014, 12:30 [IST]