For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்வோம்.. கணவனை விவாகரத்து செய்ய மாட்டோம்: பெண்களின் மைன்ட்செட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

லண்டன்: கணவன் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் வேறு ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளுவோமே தவிர, கணவனை விவாகரத்து மட்டும் செய்யவே மாட்டோம் என்று பெரும்பாலான ஐரோப்பிய பெண்கள் கூறுகிறார்கள் என்று தெரிவிக்கிறது இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு.

பெண்களின் புற செக்ஸ் தேவைகள் குறித்த ஆய்வை வின்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் விளையாட்டு துறை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல வித்தியாசமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிழ்ச்சிதான்.. ஆனால் இல்லை..

மகிழ்ச்சிதான்.. ஆனால் இல்லை..

ஆய்வின் தலைவர் பேராசிரியர் எரிக் ஆண்டர்சன் கூறுகையில், "மகிழ்ச்சியான தம்பதிகள் அனைவரும், படுக்கையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பதை இந்த ஆய்வில் தெளிவாக அறிய முடிந்தது" என்றார்.

100 பெண்களிடம் ஆய்வு

100 பெண்களிடம் ஆய்வு

திருமண பந்தத்தை தாண்டி வெளியில் உறவு வைத்துக்கொள்ள உதவும் வெப்சைட் ஒன்றில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள் மட்டும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். திருமணமான, 35 முதல் 45 வயதுக்குட்பட்ட 100 பெண்கள் இதில் பங்கேற்றனர்.

காமத்துடன் காதல்

காமத்துடன் காதல்

ஆய்வில் பங்கேற்றதில் 67 பெண்கள், செக்சுக்காக மட்டுமின்றி, வித்தியாசமான காதல் அனுபவத்துக்காகவும் பிறரிடம் செல்வதாக தெரிவித்துள்ளனர். காதலை பேஷனாக வெளிப்படுத்தும் ஆண்களை தேடி தாங்கள் அலைவதாக கூறியுள்ளனர்.

எங்க சுற்றினாலும் வீட்டுக்குதான் வருவோம்

எங்க சுற்றினாலும் வீட்டுக்குதான் வருவோம்

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பிற ஆண்களிடம் போய் இன்பம் அனுபவித்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கே திரும்பத்தான் 100 பெண்களும் விரும்புகிறார்கள். வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வோம், அதே நேரம் கணவனை விவாகரத்து செய்ய மாட்டோம் என்று ஆய்வில் பங்கேற்ற 100 பெண்களும் ஒரே மாதிரி சொல்லி ஆய்வு குழுவை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

கணவன் அன்பானவர்தான்.. ஆனாலும்..

கணவன் அன்பானவர்தான்.. ஆனாலும்..

ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான பெண்கள் தங்களது கணவன் மகிழ்ச்சியாக வைத்துள்ளதாகவும், அன்போடு பழகுவதாகவும்தான் தெரிவித்துள்ளனர். எனவே விவாகரத்து செய்துவிட்டு, வேறு கணவனை திருமணம் செய்வது தங்களுக்கு தேவையில்லை என்று அந்த பெண்கள் கூறியுள்ளனர்.

கள்ளத்தொடர்பிலும் ஒரு நாணயம்

கள்ளத்தொடர்பிலும் ஒரு நாணயம்

ஆய்வில் பங்கேற்ற 47 சதவீத பெண்கள், திருமணத்துக்கு பிறகு ஒரே ஒரு ஆணுடன் மட்டுமே உறவை வைத்துக்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளனர். அந்த ஆணிடம் மனதுரீதியாக நெருங்கியிருந்தால்தான் செக்சில் இயல்பாக இருக்க முடிவதால் கணவனை தவிர கூடுதலாக ஒரு ஆண் போதும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கட்டிலை மறக்காதீர்கள்

கட்டிலை மறக்காதீர்கள்

காதலை தாண்டி மனைவியை காமத்திலும் திருப்திப்படுத்த வேண்டும் அல்லது, ஒரே உடலுடன் உறவு வைத்துக்கொள்வது பெண்களுக்கு போர் அடித்துவிடும் என்பதே இந்த ஆய்வின் மூலமாக ஆய்வாளர்கள் இறுதியாக கண்டறிந்த மையக்கருத்தாக உள்ளது.

English summary
When it comes to cheating, middle-aged married women - and not just men - not happy with sex lives are seeking extra-marital affairs to find that missing action. According to an interesting study, when middle-aged women seek extra-marital affairs, they are looking for more romantic passion which includes sex - and do not want to divorce their husbands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X