ஏலியன்ஸ்களை கண்டறிய “ஸ்வர்மிஸ்” ரோபோ – நாசாவின் புத்தம்புதிய முயற்சி!
நியூயார்க்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வேற்று கிரக மனிதர்கள் குறித்த ஆராய்ச்சிக்காக "ரோபோ" படைகளை தயாரிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பல்வேறு கிரகங்களை ஆய்வு செய்ய, செயற்கைக் கோள்களை அனுப்பி உள்ளது.
மேலும், விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவி பல ஆய்வுகளையும் நடத்தி வருகிறது.
ஏலியன்ஸ் புகைப்படம்:
இந்நிலையில், இம்மாத துவக்கத்தில், நிலவின் மேற்பரப்பில் வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் குறித்த புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்வர்மிஸ் ரோபோ:
இதையடுத்து, மற்ற கிரகங்களில் வாழும் வேற்று கிரகவாசிகளை கண்டறிய, "ஸ்வர்மிஸ்" என்றழைக்கப்படும் சிறிய வகை ரோபோக்களை தயாரித்துள்ளது.
முதலாவதாக நான்கு:
தற்போது நான்கு ரோபோக்களைத் தயாரித்துள்ள நாசா அவற்றில் கேமரா, வைபை ஆகிய வசதிகளையும் உருவாக்கி உள்ளது.
பரிசோதனையில் வெற்றி:
ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி வான்வெளி மையத்தில் இந்த ரோபாட்கள் பரிசோதனை செய்யப்பட்டபோது, நன்கு இயங்குவது தெரிய வந்துள்ளது.
நம்பிக்கை தெரிவிக்கும் நாசா:
மேலும், இவற்றின் மூலமாக வேற்று கிரகங்களின் தண்ணீர், மனிதர்கள் வாழ்நிலை சூழ்நிலைகளையும் அறிந்து கொள்ளலாம் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.